Fri. May 17th, 2024

ஆனையிறவு பகுதியில் இன்று அதிகாலை இரு லொரி- ஹயஸ் வேன் விபத்து ஒருவர் பலி

ஏ9 வீதி ஆனையிறவு பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட வீதி விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதோடு. இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து இன்று அதிகாலை மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த இரண்டு லொறிகளுடன் கொழும்பிலிருந்து யாழ் நோக்கி வந்த ஹயஸ் வேன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


இச் சம்பத்தில் வேன் சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதோடு, லொறி சாரதி ஒருவரும் ,ஹயஸ் வாகனத்தில் பயணி்த்த மற்றும் ஒரு நபரும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்