அனுரகுமார திஸாநாயக்க கட்டுப்பணம் செலுத்தினார்!!
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தியது.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.