Sat. May 18th, 2024

ஆசிய போட்டிக்கு சண்.தயாளன் தகுதி

வளர்ந்தோருக்கான ஆசிய மெய்வல்லுநர் போட்டிக்கு இலங்கை சார்பாக முன்னாள் யாழ் கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்வி பணிப்பாளர் சண்.தயாளன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 11ம், 12ம் திகதிகளில் சுகததாச  விளையாட்டு மைதானத்தில் ஆசிய மட்ட தெரிவுப் போட்டிகள் நடைபெற்றது.
இதில் 60 வயது தொடக்கம் 65 வயதுப் பிரிவினருக்கான ஈட்டி எறிதல் மற்றும் கோலூன்றிப் பாய்தல் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றுத் தெரிவு செய்தப்பட்டுள்ளார்.
ஈட்டி எறிதல் போட்டியில்  32.54 மீற்றர் தூரம் எறிந்தும், கோலூன்றி  பாய்தல் போட்டியில்  2.20 மீற்றர் பாய்ந்தும் வெள்ளிப் பதக்கங்களை பெற்று ஆசிய மட்ட போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். எதிர்வரும் பங்குனி மாதம் வளர்ந்தோருக்கான ஆசிய மட்ட போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்