அவசரமாக தரையிறங்கிய இந்தோனேசிய செல்லும் விமானம், விமானத்திலேயே உயிரிழந்த 2 பயணிகள்
தாய் லயன் ஏர் நிறுவனத்தைச் சேர்ந்த இந்தோனேசியா செல்லும் பயணிகள் விமானம் இன்று (13) அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறங்கியுள்ளது.
சவூதி அரேபியாவின் ஜெட்டாவிலிருந்து இந்தோனேசியாவின் சூரபயாவுக்கு விமானம் சென்றபோது இரண்டு பயணிகள் நோய்வாய்ப்பட்டதாகவும் . அதனால் , நோய்வாய்ப்பட்ட இரண்டு பயணிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக விமானம் கட்டூநாயக்க விமான நிலையம் நோக்கி திருப்பப்பட்டு தரையிறக்கப்பட்டது
இருப்பினும், விமானம் விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன் பயணிகள் இருவரும் இறந்துவிட்டதாக விமான நிலைய மருத்துவ அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டது.
இறந்தவர்கள் 71 வயதான இந்தோனேசிய பெண் மற்றும் 64 வயதான ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிந்தவுடன் இரு பயணிகளிநாடும் உடல்கள் கொழும்பில் உள்ள இந்தோனேசிய தூதரகத்தில் ஒப்படைக்கப்படும்.