Sun. May 19th, 2024

அல்வாய் பகுதியைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா

கரவெட்டி சுகாதார பிரிவில் உள்ள அல்வாய் பகுதி J/378 கிராம அலுவலகர் பிரிவைச்  சேர்ந்த  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதில் இரண்டு பெண்களும் ஒரு சிறுவனும் உள்ளடங்கியுள்ளனர். கரவெட்டி பகுதியில் போலியாகொட மீன் சந்தைக்கு மீன் வியாபாரத்தில் ஈடுபட்டவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருடன் அல்வாய் பகுதியைச் சேர்ந்த  பழகிய மேற்படி மூவருக்குமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் மூவரும் தற்போது அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர ஏற்கனவே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தென்பகுதியை சேர்ந்தவர்கள்  தற்போது மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் செய்யப்பட்ட பரிசோதனையில்  3 பேருக்கு இன்னும் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்