அல்வாயில் 3 கன்றுகளை ஈன்ற மாடு
09.04.2021.இன்று வெள்ளிக்கிழமை அல்வாய் மனோகரா பகுதியில் பஞ்சாட்சரம் செல்வராஜா என்பவருடைய வீட்டில் பசு மாடு ஒன்று மூன்று பசு கன்றுகளை ஈன்றுள்ளது. அதில் ஒரு கன்று இறந்துள்ள நிலையில் மிகுதி இரு கன்றுகளும் சுகமாக உள்ளது. ஏற்கனவே முதல் முறை இருகன்றுகளை ஈன்று தற்பொழுது 3 கன்றுகளை ஈன்றுள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் காலையிலிருந்து பார்வையிட்டு வருகின்றார்கள்.