அறநெறிப் பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை
மேல்மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்ற பகுதிகளில் அமைந்துள்ள அறநெறிப் பாடசாலைகள் தவிர ஏனைய அனைத்து அறநெறிப் பாடசாலைகளினதும் செயற்பாடுகளை நாளை முதல் ஆரம்பிக்குமாறு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. கொவிட் 19 தொற்று காரணமாக நாட்டில் இந்து சமய அறநெறிப் பாடசாலையின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன. தற்போது நேய்த் தொற்று பரம்பலின் தற்போதைய நிலைமை மற்றும் மீள ஏற்படக் கூடிய நிலைமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் உரிய தரப்பினரின் கலந்தாலோசனைகளோடு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அறநெறிப் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு ஆவன செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.