அரியாலை தேவாலய ஆராதனையில் பங்குகொண்டவர்கள் மீது கோரோனோ சோதனை, தொற்று இல்லை
அரியாலை தேவாலய ஆராதனையில் பங்குகொண்டமை காரணமாக கச்சாய், அல்லாரை பிரதேசங்களில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பின் கீழ் இருந்தவர்களிடையே இன்று கொரோனாவை கண்டறிவதற்கான பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. பரிசோதனை முடிவுகள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது. அதன் பிரகாரம் யாரும் கொரோனா தொற்றை கொண்டிருக்கவில்லை.