அரியாலையில் ஹெராயின் விற்பனை செய்த பெண் கைது
யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அவர்களின் தலைமையில் இயங்கும் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் போதைப் பொருளுடன் 35 வயது பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி பெண் வைத்தியசாலையில் பணிபுரிவதாக அடையாளப்படுத்தும் முகமாக மோட்டார் சைக்கிளின் முன்புறம் வைத்தியசாலையின் அடையாளத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்டிக்கர் ஒட்டிய வண்ணம் ஹொரோய்ன் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.