அரிசி ஆலை அத்தியாவசிய சேவையாக மறு அறிவித்தல் வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய உணவு வழங்கல் , நெல் உற்பத்தி, களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகம், உணவு பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்காக அத்தியாவசியமான அனைத்து அரிசி ஆலைகளையும் கொவிட் 19 தனிமைப்படுத்தல் அத்தியாவசிய சேவையாக மறு அறிவித்தல் வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து நெல் உற்பத்தி ஆலை உரிமையாளர்கள் தமது பிரதேசத்தில் அரிசி உற்பத்தி தன்னிடமுள்ள நெல் தொகையினை அரிசியாக மாற்ற வேண்டும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.