Wed. May 15th, 2024

அரச ஊழியர்கள் வேலை செய்யவேண்டிய நேரம்

அரச ஊழியர்களின் கடமை செய்ய வேண்டிய அளவு நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க முடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்
கொழும்பு மாவட்டத்தின் உள்ளே அரச நிறுவனங்களில் ஊழியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும். ஏனைய மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்களில் 50 வீதமான ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும்.
அனைத்து அரச நிறுவனங்களிலும் பணிக்கு சமூகமளிக்காத ஊழியர்கள் வீட்டிலிருந்து தமது கடமைகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நிறுவனத்திலும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் யார் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என்பதை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க முடியும். ஒரு நாளில் பணிக்கு சமூகமளிக்கும் முன்றில் ஒரு பகுதியினர் மற்றும் 50 வீதமானவர்களுக்கு பதிலாக அடுத்த நாளில் வேறு பிரிவினரை தெரிவுசெய்வதற்கு நிறுவனத் தலைவர்களுக்கு முடியும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்