Fri. May 17th, 2024

அரச ஊழியர்களுக்கான அறிவித்தல்

ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக நியமனம் பெற்ற அனைத்து அரச ஊழியர்கள் அனைவரும் எவருக்கும் பயப்படாமல் தங்கள் கடமையை செய்வதோடு தேர்தல் ஆணைக்குழுவிற்கும், நீதி மன்றத்திற்கும் மாத்திரமே பொறுப்பு கூற வேண்டியவர்களாக செயற்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தினால் நாளாந்த வேதனம் பெறும் ஊழியர்கள் முதல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் வரை, தேர்தல் கடமைகளில் ஈடுபடும் ஒவ்வொரு அரச ஊழியரும் தமது செயற்பொறுப்பு குறித்த சிறந்த புரிந்துணர்வுடனும், விசேட கவனத்துடனும் எவருக்கும் விசேட கரிசனை காட்டாமலும், பக்கச்சார்பின்றியும் செயலாற்ற வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்