Sat. May 18th, 2024

அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதி படுத்தி அவர்களை இடம் மாற்ற செய்ய கோரிக்கை.

அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் பாதுகாப்பாக உறுதி படுத்தி வேறு இடத்திற்கு மாற்ற அனுராதபுரம் சிறைச்சாலை உயரதிகாரியிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளதாக டெலோ கட்சியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
-இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா அச்சம் காரணமாக கைதிகள் இன்று சனிக்கிழமை (21) மாலை சிறை உடைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் போது கைதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் அதில் ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் பலர் காயமடைந்துள்ளதாக   தகவல் வந்துள்ளது.
-இந்த நிலையில் அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளை பாதுகாக்கும் வகையில் அனுராதபுரம் சிறைச்சாலை உயர் அதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்தினேன்.
-இதன் போது அரசியல் கைதிகளுக்கு எவ்வித பாதீப்பும் இல்லை எனவும் அவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக குறித்த அதிகாரி தெரிவித்தார்.
எனினும் குறித்த அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதி படுத்த கோரிக்கை விடுத்ததோடு, அவர்களை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற குறித்த சிறைச்சாலையின் உயர் அதிகாரியிடம் வேண்டுகோள் விடுத்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்