அதிர்ச்சி செய்தி- இந்திய வகை கோரோனோ வைரஸடன் சமூகத்தில் 5 பேர் இனங்காணல்
இதுவரை காலமும் சமூகத்தில் பரவாமல் இருந்த இந்தியவகை வைரஸ் தற்பொழுது சமூகத்தில் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் வெளியில் இருந்து வந்த பயணிகளில் தடுப்பு நிலையங்களில் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டுவந்தநிலையில் தற்பொழுது தெமட்டகொட பகுதியில் சமூகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை வைரஸ் தொற்றுடன் இதுவரை 5 பேர் இனம்காணப்படுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது மற்றவகை வைரஸ்களுடன் ஒப்பிடும் பொழுது மிக விரைவில் பரவும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் வகைகளில் இந்திய வகை வைரஸ் அதிவேகமாக பரவக்கூடியது என்று ஆராச்சியாளர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது