கண்டியில் தவறுதலாக பெண்ணுக்கு 2 தடுப்பூசி ஏற்றிய சுகாதார ஊழியர்கள்
கண்டியில் உள்ள ஒரு தடுப்பூசி நிலையத்தில் ஒரு வயதான பெண்மணி தடுப்பூசிக்குச் சென்றபோது, தற்செயலாக இரண்டு டோஸ் மாடர்னா தடுப்பூசி சில நிமிட இடைவெளியில் ஏற்றப்படுள்ளார்
இரண்டாவது ஊசி பெற்ற பிறகு, அவர் மயக்கம் அடைந்ததுடன் பல்வேறு அறிகுறிகள் அவரது உடலில் ஏற்பட்டுள்ளது
கண்டியில் உள்ள ஒகஸ்டாவட்டா தடுப்பூசி மையத்தில் அவருக்கு தடுப்பூசி போடப்பட்டது, அங்கு அவருக்கு உடனடியாக ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டது, பின்னர் அவர் பேராதனை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தடுப்பூசி மையத்தில் தனக்கு இரண்டு முறை தடுப்பூசி போடப்பட்டதாக மருத்துவர்களிடம் தெரிவித்திருந்தார்.
அவரது கணவர் பேராதனை காவல்துறை மற்றும் சுகாதார அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், முறையான விசாரணை நடத்தப்படும் என்றும் மத்திய மாகாண சுகாதார சேவைகள் இயக்குநர் நிஹால் வீரசூரியா தெரிவித்தார்.
இது உலகில் அறிவிக்கப்பட்ட முதல் சம்பவமாக இருக்கலாம் என்று தெரியவருகிறது