கரவெட்டி பிரதேச சபையில் இன்று இரத்ததான முகாம் நடைபெற்றது
வடக்கு கிழக்கு புனர்வாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (20.03.2023) இரத்ததான முகாம் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வானது முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் மற்றும் NBCM Foundation முதல்வர் சி.தயாபரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
கரவெட்டி பகுதியை சேர்ந்த பல இளம் தலைமுறையினர் இரத்ததான முகாமில் ஆர்வத்துடன் பங்குபற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.