Fri. May 17th, 2024

மோட்டார் சைக்கிளில் பயணித்த போது கடுமையான காற்றினால் தூக்கி வீசப்பட்ட நபர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கோப்பாய் பாலத்துக்கு அருகே மோட்டார் சைக்கிளில் பயணித்த போது கடுமையான காற்றின் காரணமாக தூக்கி வீசப்பட்ட முதியவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று 14  உயிரிழந்துள்ளார்.  கோப்பாய் தெற்கு பகுதியை சேர்ந்த சந்திரசேகர் சரவணமுத்து வயது 80 என்ற முதியவரே  உயிரிழந்துள்ளார். கடந்த 12ஆம் திகதி மேற்படி முதியவர் அவரது மகனும் எழுதுமட்டுவாள் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டு கொண்டிருந்துள்ளனர்.  இதன்போது அவர்கள் கோப்பாய் பாலத்திற்குஅருகில் கடும் காற்று  வீசியநிலையில்  காற்றினால் முதியவர் தூக்கி வீசப்பட்டார். கேடறுடன் அடியுண்டு தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்