மட்டுவில் மோகனதாஸ் கிண்ணம் – அரியாலை ஐக்கிய அணி வசம்
மட்டுவில் மோகனதாஸ் விளையாட்டு கழகம் தமது 50 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாடத்திய 40 வயதுக்கு மேற்பட்ட கரபந்தாட்ட தொடரில் அரியாலை ஐக்கிய அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
இதன் இறுதியாட்டம் நேற்று வியாழக்கிழமை குறித்த கழக மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் அரியாலை ஐக்கிய அணியை எதிர்த்து ஆவரங்கால் இந்து இளைஞன் அணி மோதியது.
முதலாவது செற்றில் பலத்த போராட்டத்தில் ஆவரங்கால் இந்து இளைஞன் அணி 25:20 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஆனால் அடுத்த 3 செற்களிலும் அரியாலை ஐக்கிய அணி 25:16,25:20,25:23 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்.