வீதியை விட்டு விலகிய உந்துருளி!! -பெண்ணொருவர் பலி-
கண்டி – இரண்டாம் ராஜசிங்க வீதியில் உந்துருளி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று நடைபெற்ற விபத்தில் குறித்த பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவரே உயிரிழந்தவர் ஆவர்.
குறித்த விபத்தில் காயமடைந்த மற்றைய நபர் சிகிச்சைகாக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.