Tue. May 21st, 2024

4 பாாிய திட்டங்கள், 50 பில்லியன் செலவு..! குடாநட்டுக்கான குடிநீா் திட்டம் ..

50 பில்லியன் ரூபாய் செலவில் வடக்கு மாகாணத்தில் 4 பாாிய அபிவிருத்தி திட்டங்களை இம்மாத இறுதிக்குள் நடைமுறைப்படுத்தவுள்ளதாக வடக்கு ஆளுநா் சுரேன் ராகவன் கூறியுள்ளாா்.

நீண்ட காலமாக இழுபறி நிலையில் இருந்த பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகள் தொடா்பாக மீனவா் சங்கத்துடனும்,

அருகில் உள்ள பாடசாலையுடனும் பேச்சுவாா்த்தைகளை நடாத்தி சுமுகமான நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த திட்டமும், வடமராட்சி மற்றும் ஆனையிறவு களப்புக்களில் இருந்து குடாநாட்டுக்கான குடி நீா் பெறும் திட்டமும்,

வடமாகாணத்திற்கான கூட்டுறவு வங்கி ஒன்றையும் ஆரம்பிக்கவுள்ளோம். இந்த 4 பாாிய திட்டங்களும் சுமாா் 50 பில்லியன் ரூபாய் செலவில்

இந்த மாதத்தின் இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான நிதியை பாாிய இடா்பாடுகளுக்கு மத்தியில் நாங்கள் பெற்றிருக்கின்றோம்.

மேலும் இந்த பாாிய திட்டங்களையு ம் கூட பல இடா்பாடுகளுக்கு பின்னரே ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

குறிப்பாக பருத்தித்துறை துறைமுகம் அமைப்பதில் பாாிய பிரச்சினைகள் இருந்தது. அதற்காக பாடசாலை சமூகம் மற்றும் மீனவா் சங்கங்களுடன்

பல பேச்சுவாா்த்தைகளை நடத்தினோம். அதேபோல் வடமாகாண கூட்டுறவு வங்கியையும் ஆரம் பிக்கவுள்ளோம். அது வியாபார நோக்கம் கொண்ட ஒன்றல்ல.

அது கூட்டுறவாளா்களுக்கானது என்றாா்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்