Wed. May 15th, 2024

விவசாயிகளுக்கு இலவச உரம் , சஜித் மற்றும் கோத்தபாய போட்டியாக அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் (யுஎன்பி) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, அவர் நாட்டின் ஜனாதிபதியானவுடன் விவசாயிகளுக்கு உரங்களை இலவசமாக வழங்குவார் என்று அறிவித்துள்ளார்

உரம் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, காய்கறி மற்றும் பழ உற்பத்தியாளர்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் பொழுதே இதனை கூறினார்.
ஏற்கனவே மாணவர்களுக்கு இலவச மதிய உணவு மற்றும் சீருடைகள் வழங்க படும் என்று கூறியுள்ளமை தெரிந்ததே.
கோத்தபாய ராஜபக்ச இலவசமாக விவசாயிகளுக்கு உரம் வழங்கவுள்ளதாக அறிவித்தபொழுது சஜித் தரப்பினர் அதனை விமர்சித்து கருத்து வெளியிட்டிருந்ததுடன் தற்பொழுது அதே வாக்குறுதியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்