வவுனியாவில் சங்கிலி பறிப்புடன் தொடர்புடைய இருவர் கைது
கடந்தமாதம் 30ஆம் திகதி வவுனியா அலகல்லு பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் தங்கச்சங்கிலி ஒன்றை பறித்து சென்றிருந்தனர்.
அது தொடர்பான முறைப்பாடு வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாரிடம் வழங்கப்பட்டிருந்தது. அதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 20,23 வயதுடைய இருவரை நேற்று கைது செய்துள்ளதுடன், சங்கிலி பறிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும், திருடப்பட்ட ஒன்றரை பவுண் தங்கச்சங்கிலியையும், மீட்டுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் குறித்த இருவரையும் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.