Fri. May 17th, 2024

வல்லை பகுதி சுடலையில் இளம்பெண்ணுக்கு சூனியம்?

வடமராட்சி கரணவாய் பகுதியில் சுகயீனம் காரணமாக பெண் ஒருவர் இறந்துள்ள நிலையில்  சடலம் வல்லைப்பகுதியில் உள்ள மயானத்தில் எரிக்கப்பட்டது. மூன்றாம் நாள்  காடாத்து சடங்கிற்கு  சென்று  சாம்பல் எடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது சாம்பல் அள்ளும் பகுதியில் ஒரு கிடங்கு  தென்பட்டுள்ளது . கத்தியால் அதை தட்டி பார்க்கும் பொழுது அதனுள் ஒரு பானை இருப்பதைக் கண்டு உள்ளார்கள்.  பானை சீலையால் மூடி கட்டப்பட்டு இருந்தது.

இதனால் காடாத் துக்கு சென்றவர்களுக்கு அதிர்ச்சி பயமும் ஏற்பட்டது. பானையிலுள்ள சீலையை கத்தியால் கிழித்து திறந்த பொழுது  துர்நாற்றம் வீசியது. அதனுள் ஒரு பொம்மை செய்து வைக்கப்பட்டிருந்ததுடன் அந்தப் பொம்மை மேல் முழுவதும் ஆணி அறைந்து ஒவ்வொரு அறைந்த ஆணியிலும் பெண்ணோருவரின்  படங்கள் ஓட்டி வைக்கப்பட்டிருந்தது.

அது இளம் பெண் ஒருவரின் படமாக இருந்ததுடன் அவர் வடமராட்சி பகுதியை சேர்ந்தவர் என்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தார்கள்.

அந்தப் பெண் பிள்ளைக்கு செய்திருப்பது செய்வினை சூனியம் ஆக இருக்கலாம் என்றும் அந்தப் பெண் பிள்ளையின் வீட்டாருக்கு தெரிவிப்பதற்கு காடாத்துக்கு சென்றவர்கள் தயங்குகிறார்கள்,  எப்படியாவது அவருக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் என்று சிலர் முயற்சி எடுத்து உள்ளார்கள் என்றும் தெரியவருகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்