வலுதூக்கலில் சென்ஜேம்ஸ் மகளிர் -ஐஸ்வர்யா தங்கம் , யாழ் இந்து மகளிர்-ஜெ.பஜீனா வெள்ளி
இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான வலுதூக்கும் போட்டியில் சென்ஜேம்ஸ் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த வி.ஐஸ்வர்யா தங்கப் பதக்கத்தை கைப்பற்றினர்.
இலங்கை பாடசாலைகள் வலுதூக்கும் சம்மேளனம் நடாத்திய தேசிய மட்ட வலுதூக்கல் போட்டிகள் நேற்று கேகாலை ராஜகிரிய மகா வித்தியாலய உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதில் 18 வயதிற்குட்பட்ட பெண்களிற்கான வலுதூக்கும் போட்டியில் 84 கிலோவுக்கு மேற்பட்ட நிறைப் பிரிவில் சென்ஜேம்ஸ் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த வி. ஐஸ்வர்யா 225 கிலோ பளுவைத் தூக்கி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினர்.
இதனிடையே இதில் 18 வயதிற்குட்பட்ட பெண்களிற்கான வலுதூக்கும் போட்டியில் யாழ் இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த ஜெ. பஜீனா 63 கிலோ எடைப் பிரிவில் 205 கிலோ பளுவைத் தூக்கி வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினர். வலுதூக்கலில் ஜெ.பஜீனா வெள்ளி பதக்கம் வென்றார்.