Wed. May 22nd, 2024

வலய ரீதியாக ஆசிரியர்களின் நிதி பங்களிப்பு சேர்க்கை

கொவிட் 19 செயற்பாடுகளுக்கான ஆசிரியர்களின் நிதிப்பங்களிப்பு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சினால் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக வடக்குமாகாண ஆளுநரால் 9/4/2020 ஆம் தேதி கலந்துரையாடலில் அறிவுறுத்தப்பட்டதன் பிரகாரம்
மாகாண அரச அலுவலர்களின் நிதிப்பங்களிப்பினை வழங்கும் முகமாக சகல ஆசிரியர்களினதும்  ஒருநாள் வேதனத்தை குறித்த நோக்கத்திற்காக வழங்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வாறு சேகரிக்கும் நிதியானது வடக்கு மாகாணத்தின் கொவிட் 19 நோய் தொற்றினை தடுக்கும் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும்.

ஆசிரியர்களின் வேதனத்திலிருந்து கழிப்பனவை மேற் கொள்வதற்காக வலய ரீதியாக ஆசிரியர்களின் பங்களிப்பு தொகையை உள்ளடக்கிய பெயர் பட்டியலை தயாரித்து வன் மென் பிரதிகளாக 17/4/2020 ஆம் திகதிக்கு முன் சமர்ப்பிக்குமாறு வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இளங்கோவன் அறிவித்துள்ளார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்