வடக்கு கடலில் வைத்து 3 இந்திய மீனவர்கள் கைது!!
வடக்கு கடற்பகுதிக்குள் அத்துமீறி சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 3 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு கடற்படையினர்கள் குறித்த கடற்பகுதியில் நேற்று கடமையில் ஈடுப்பட்டிருந்த வேளையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 31 வயது முதல் 34 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மீன்வள உதவி செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.