Sun. May 12th, 2024

லாரி டிரைவர் மேலயும் பேனர் அச்சடித்தவர் மீதும் பழிபோடுறாங்க.. சுபஸ்ரீ மரணம் குறித்து விஜய் பேச்சு

யார் மீது பழி போடுவது என்று தெரியாமல் லாரி டிரைவர் மேலயும் பேனர் அச்சடித்தவர் மீதும் பழிபோடுறாங்க என நடிகர் விஜய், சுபஸ்ரீ மரணம் குறித்து பிகில் இசை வெளியீட்டு விழாவில் பேசினார்.
பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் மாலை சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்தது. ஒவ்வொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் அரசியல் பேசும் விஜய் வழக்கம் போல் பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவிலும் அரசியல் பேசினார்
பேனர் விழுந்து லாரி ஏறி இளம் பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் யார் மீது பழி போடுவது என்று தெரியாமல் லாரி டிரைவர் மேலயும் பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடுகிறார்கள். என்று அதிமுக வை ஒரு வாறு வாரினார் .
சுபஸ்ரீ விவகாரத்தில் டுவிட்டரில் ஒரு ஹேஷ்டேக் போட்டால் நன்றாக இருந்திருக்கும். சமூக வலைதளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும். என்னுடைய போட்டோவை உடையுங்கள். போஸ்டரை கிழியுங்கள். ஆனால் என் ரசிகர் மீது கை வைக்காதீங்க. யாரை எங்கு உட்கார வைக்கணுமோ… அவர்களை அங்கு உட்கார வைத்தால் நல்லா இருக்கும்” என்றார்..
இந்த நிலையில் இவரின் இந்த பேச்சுக்கு திமுக , கமல் ஹாசன் மற்றும் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளதுடன் சமூக வலைத்தளங்களிலும் பல்லாயிரக்கணக்கானோர் ஆதரவு தெரிவித்து பதிவிட்டு வருகிறார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்