Fri. May 17th, 2024

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகள் கொளுத்தும் வெயிலில்

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக செல்லும் பலரும் மணிக் கணக்கில் கொழுத்தும் வெய்யிலில் காத்திருக்க வைக்கப்படுவதாக கடும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் மாதாந்த கிளினிக் சிகிச்சைக்காக செல்லும் முதியவர்கள் வீதியில் கால் கடுக்க வெய்யிலின் மத்தியில் காத்திருக்க வைக்கப்படுவதாக முதியவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு காத்திருப்போர் இரண்டு மணித்தியாலங்களிற்கும் மேலாக வைத்தியசாலை வீதியில் காத்திருந்த பின்பே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால் ஏற்கனவே உள்ள நோய்களிற்கு மேலதிகமாக அவர்களுக்கு புதிய நோய் ஏற்படும் நிலமையும் காணப்படுகின்றது.

எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்