Sun. May 19th, 2024

யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(30/5) மின்சாரம் தடைப்படும்

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(30/5) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ். அளவெட்டி, மாகியப்பிட்டி, சண்டிலிப்பாய் வடக்கு, நாகர் கோவில், மாமுனை, செம்பியன் பற்று, தாளையடி, உடுத்துறை, வெற்றிலைக்கேணி, ஆழியவளை, வத்திராயன், கட்டைக்காடு, கேவில், முள்ளியான், வடமராட்சி கிழக்கு கடற்தொழில் கூட்டுத் தாபனம், 55 ஆவது இராணுவ முகாம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்