Sun. May 19th, 2024

யாழ்.ஆவரங்காலில் வீடு புகுந்து அதிகாலை வாள்வெட்டு

யாழ்.புத்தூர் ஆவரங் கால் பகுதியில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் வீடு புகுந்து வாள் வெட்டுக் குழு நடத்திய தாக்குதலில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த விஜயராசா விஜிதரன் (வயது-26) என்ற இளைஞனே கால் மற்றும் கழுத்து பகுதியில் வாள்வெட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரு மோட்டார் சைக்கிள்களில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் வீட்டுக்குள் நுழைந்த வாள்வெட்டுக் கும்பல் இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றி ருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய்ப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்