Sun. May 19th, 2024

யாழில் வீட்டை உடைத்து திருடிய கு ற்றச்சாட்டில் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் வீட்டை உடைத்து திருடிய கு ற்றச் சாட்டில் இருவர் இன்று (9/3) அதிகாலை யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாண நகர் பகுதியில் வீட்டில் ஆட்கள் இல்லாத நேரம் வீட்டினை உடைத்து வீட்டில் இருந்த பொருட்களை திருடிய குற்றச் சாட்டிலேயே இருவர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 லட்சம் ரூபா பெறுமதியான வீடியோ கேமரா ஒன்றும் பத்தாயிரம் ரூபா பணமும் வெளிநாட்டு நாணயங்களுடனும் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தார்கள். கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் அரியாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் குறித்த சந்தேக நபர்கள் பல்வேறுபட்ட திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்