Sat. May 18th, 2024

யாழில் தேங்காய்க்கு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் நபர்

எழுதுமட்டுவாழ் பகுதியில் தும்புத் தொழிற்சாலை நடத்தும் நபர் ஒருவர் அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் சென்றுஅங்கு உள்ள தேங்காய்களை கொள்முதல் செய்து குவித்த வண்ணம் உள்ளார். அவர் செய்யும் செயலால் யாழ்மாவட்டத்தில் தேங்காயின் விலை அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அவரிடம் கேட்டபோது தான் கொழும்புக்கு ஏற்றுவதற்காக கொள்முதல் செய்வதாக கூறுகிறார். இவர் செய்யும் இந்த செயலால் யாழ் மாவட்டத்தில் செயற்கையாக தேங்காய்க்கு தட்டுப்பாட்டை  ஏற்படுத்தி தேங்காயின் விலை 100 க்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றது. இவரை தேங்காய் கொள்முதல் செய்யவிடாமல் தடுக்கும் நடவடிக்கையில் யாழ் தென்மராட்சியில் உள்ள பிரதேச செயலர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடப்படுகிறது. அவர்கள்தான் இதை கவனிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து இவரை தேங்காய் குவிக்க இடமளித்தால்  மாவட்டத்தில் தேங்காயின் விலை 150 ரூபாவரை விற்பனை செய்யக்படக்கூடும் என்று மக்கள் விசனம் வெளியிட்டுள்ளார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்