Thu. May 16th, 2024

யாழில் கோரோனோவில் குணமடைந்து வீடு சென்றோருக்கு இன்னும் கோரோனோ

யாழில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு சென்றவர்களுக்கு இன்னமும் சிறியளவில் கொரோனா தாக்கம் உள்ளதாக தெரியவருகிறது.

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று  வீடு திரும்பிய 5 பேருக்கு வைரஸ் தாக்கம் சிறிதளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

14.05.2020. வியாழக்கிழமை

27 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

அதில் குறிப்பாக யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு – 6 பேர் . இவர்கள் அனைவரும் அரியாலை பகுதியை சேர்ந்தவர்கள்.

கடந்த மாதம் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று இரண்டு கிழமைக்கு முன்னர் வீடு திரும்பியவர்கள்.

நேற்றைய  பரிசோதனையில் இவர்களில் ஐவருக்கு வைரஸ் தொற்றின் தாக்கம் இன்னமும் சிறிதளவில் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இவர்கள் ஐவரும் தொடர்ந்தும் இரண்டு கிழமை அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தலிலில் இருக்கவேண்டும்.

அத்துடன் இரண்டு கிழமையின் பின்னர் மீண்டும் PCR பரிசோதனை  மேற்கொள்ளப்பட வேண்டும் என நோய் தொற்று தடுப்பு நிபுணர்கள் அறிய தந்துள்ளனர். ஒருவருக்கு மீள பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

பரிசோதனைகள் விபரம்….

போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் – 2 பேர் ( ஒருவருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட வேண்டும்)

சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு சண்டிலிப்பாய்  – ஒருவர் (மீள பரிசோதனை செய்யப்பட வேண்டும்) என வைத்தியசாலை பணிப்பாளர் அறிவித்துள்ளார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்