யாழில் இன்று 84 பேருக்கு கோரோனோ தொற்று
யாழ்ப்பாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 11 சிறுவர் அடங்கலாக 84 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதில் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேரும்
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேரும்
பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் ஒருவரும்
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் 04 பேரும்
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஒருவரும்
யாழ்.போதனா வைத்தியசாலையில் 02 பேரும்
கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 25 பேரும்
சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 பேரும்
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 21 பேரும் தொற்றுக்கு உள்ளானதாக அறிவிக்கப்படுள்ளது