மோடியின் அழைப்பை ஏற்றுக்கொண்ட கோத்தபாய , முதலாவது வெளிநாட்டு பயணம் இந்தியாவுக்கு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோட்டபய ராஜபக்ஷவுக்கு இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அழைப்பை ஏற்றுக்கொண்டதாகவும் இந்தியப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி நேற்று (17)தொலைபேசி மூலம் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோட்டபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவித்தார். பரஸ்பர வாழ்த்துக்கலின் பின்னர் கோத்தபாயவை இந்தியாவுக்கு வருமாறு மோடி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை கோத்தபாய உடனடியாக ஏற்றுக்கொண்டதாக இந்தியா பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி கோத்தபாயவின் முதலாவது வெளிநாட்டு பயணம் இந்தியாவுக்காக இருக்குமென்று தெரியவருகிறது