Thu. May 16th, 2024

மூன்று பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு உயிரிழப்பு

மாலை சந்தை நெல்லியடி பிரதான வீதியில் வாகனம் திருத்தும் கடை நடத்தி வந்த மூன்று பிள்ளைகளின் தந்தை நேற்று இரவு எட்டு முப்பது மணி அளவில் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை அய்யனார் கலட்டியைச் சேர்ந்த தர்மராஜா பிரதாபம் வயது 35 என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை நெல்லியடி முடக் காட்டுப் பகுதியில் நீண்ட காலமாக வாகனம் திருத்தும் கடையை நடத்தி வந்தவர். குறித்த உரிமையாளர் சம்பவ தினமம் வீட்டில் இருந்த வேளை இந்த விபரீத முடிவை எடுத்து உயிரிழந்துள்ளார்.  சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.  பருத்தித்துறைஆதார வைத்தியசாலையில் மரண விசாரணைகள் இடம்பெற்று உள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்