முள்ளி பகுதியில் கசிப்பு உபகரணங்கள் கைப்பற்றல்
27.08.2020 இன்று வியாழக்கிழமை காலை நெல்லியடி பொலிஸாருக்கு முள்ளி பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்வதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, காட்டுப் பகுதிக்கு சென்ற போலீசார் கசிப்பு வடிக்கும் உபகரணங்களையும் கைப்பற்றி உள்ளார்கள். சந்தேக நபர்கள் போலீசாரை கண்டதும் ஓடி மறைந்து விட்டார்கள். தற்போது பொலிசார் மேலதிக விசாரணையை ஈடுபட்டுள்ளார்கள்.