Mon. May 20th, 2024

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் முதலாம் நாள் நினைவேந்தலை குழப்ப முயன்ற படையினர்

யாழ்ப்பாணம் – செம்மணியில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் முதலாம் நாள் நினைவேந்தலை செய்ய முயன்ற தமிழ் தேசிய முன்னணியினருக்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

நினைவேந்தலுக்கு சென்றிருந்த பொ.கஜேந்திரகுமார் உள்ளிட்டோரை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளர். அத்துடன் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு அவ்விடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும் அந்தத் தடையை மீறி நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அஞ்சலியில் கலந்து கொண்டவர்களை தனித்தனியே படம் எடுத்து விபரங்களை பொலிஸார் சேகரித்ததுடன், வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவீர்கள் எனவும் எச்சரிக்கையும் விடுத்திருந்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்