Fri. May 17th, 2024

முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட 26 வயது யுவதி!

முல்லைத்தீவு – கயிற்குடியிருப்பு பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செல்வபுரம், கோயிற்குடிருப்பை சேர்ந்த 26 வயது சசிப்பிரியா என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், மரணத்திற்கு காரணம் தற்போது வெளி மாவட்டத்தில் உள்ள மருமகன் சுஜிவிதன் தான் என உயிரிழந்த பெண்ணின் தந்தை பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

வீட்டின் அறையினுள் யன்னலில் துணி கயிறு ஒன்று கட்டி அதில் தூக்கிட்டுள்ளதுடன், சடலம் தரையில் இருப்பதால் ஆரம்பகட்ட விசாரணையில் பொலிஸாருக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்