Fri. May 17th, 2024

முறையற்ற கிராம பிரிப்பு மக்கள் எதிர்ப்பு போராட்டம்,ஒன்றாக சேர்க்குமாறு கோரிக்கை

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு j426 கிராம சேவகர் பிரிவை தனிப்பனை,  செம்பியன்பற்று வடக்கு என இரண்டாக முன்னாள் பிரதேச செயலரும் தற்போதைய முல்லைத்தீவு மேலதிக அரச அதிபருமான க.கனகேஸ்வரன் மற்றும்  தமிழரசு கட்சி பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்திரன் ஆகியோர் தமது நலனுக்காகவே தமது கிராம  சேவகர் பிரிவில் செம்பியன் பற்று வடக்கை தனிப்பனை மற்றும் செம்பியன்பற்று வடக்கு ஆகிய இரண்டு கிராமங்களாக பிரித்து தமது கிராமத்தின் பூர்வீக ஒற்றுமையை கெடுத்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்து இன்று காலை 10:30 மணியளவில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திறக்கு முன்னால் ஒன்று கூடி தமது கவன ஈர்ப்பில் ஈடுபட்டு வந்தனர்.எனினும் அதற்க்கு  மருதங்கேணி பொலிசார் அனுமதி மறுத்திருந்த நிலையில், கொழும்பில் பல நூற்றுக் கணக்கில் மக்கள் பங்கு கொண்டு போராட்டங்கள் இடம் பெறுதாகவும் தம்மை மட்டும்  ஏன் தடுக்கின்றீர்கள் என கேட்டதற்க்கு மருதங்கேணி பொலிசார் தமக்கு மேலிடத்து உத்தரவு என்று சளாப்பலாக பதில் அழித்தனர். இதனை தொடர்ந்து மக்கள் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்க்கு சென்று உதவி பிரதேச செயலர் பசுபதி தயானந்தனிடம் மகஜர் கையளித்து கலைந்து சென்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்