Sat. May 18th, 2024

மீண்டும் 14 ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் நாடு முழுவதும் நடைபெறவுள்ள தேர்தல் ஒத்திகை

நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய நடைபெறுகின்றதா என்பதை அவதானிக்க எதிர்வரும் 14 ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் நாடு பூராகவும் தேர்தல் ஒத்திகை நடத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அம்பலாங்கொடையில் நடத்தப்பட்ட தேர்தல் ஒத்திகையில் தோல்வியே அதிகம் என்கிறார் தேசப்பிரிய.
தேர்தல்கள் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்

பொதுத் தேர்தலுக்கான சுகாதார வழிகாட்டல் அறிக்கையொன்று சுகாதார பணிப்பாளரினால் எமக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த வழிகாட்டலுக்கு அமைய பரீட்சார்த்த தேர்தல் ஒத்திகையை நேற்று (நேற்று முன்தினம் அம்பலாங்கொடையில் நடத்தினோம். இதில் பல விடயங்கள் தோல்வியில் முடிந்துள்ளது.

முக்கியமான விடயமான கைகளை கழுவும் விடயத்தில் பல சிக்கல்கள் ஏற்பட்டது.கைகளை கழுவிய பின்னர் வாக்குச் சீட்டில் கைவைத்தால் சீட்டு நனைகின்றது. “செனட்டேசர் ‘ கிருமி தொற்று நீக்கி முறைமையும் கடினமாக உள்ளது.
அதிலும் கையில் உள்ள ஈரத்தன்மை வாக்குச் சீடை ஈரமாக்குகின்றது. எனவே வேறு முறைமையை ஆராய வேண்டியுள்ளது.
அதேபோல் தேர்தல் ஒத்திகைகள் மீண்டும் நடத்தப்படவுள்ளது. எதிர்வரும் 14ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் நாடு பூராகவும் இந்த தேர்தல் ஒத்திகை இடம்பெறவுள்ளது.
அதனை அவதானித்து அடுத்த கட்டமான என்ன செய்வது என்ற தீர்மானத்தை எடுப்போம் என்றார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்