Mon. May 13th, 2024

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியின் விளையாட்டு மைதான திறப்பு விழா

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியின் விளையாட்டு மைதான திறப்பு விழா 8/2/2020 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு சியாமளா மில் ஒழுங்கையில் அமைந்துள்ள
மீசாலை வீரசிங்கம் விளையாட்டு மைதானத்தில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியின்  அதிபர் த.அம்பலவாணர் மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையின் அதிபர் கா.கந்தசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக தென்மராட்சி வலயக்கல்வி பணிப்பாளர்
த கிருபாகரன் சிறப்பு விருந்தினராக தீவக வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் பொ.சகிலன் தென்மராட்சி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர்கள் பழைய மாணவர்கள்  புலம்பெயர் வாழ் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி நிறுவுனர் அமரர் வேதாரணியம் வீரசிங்கம் அவர்களின் தீர்க்க தரிசனமான நன்கொடையான 50 பரப்பு காணியுடன் பழைய மாணவர் சங்கங்களின் நிதிப் பங்களிப்புடன் கொள்வனவு செய்யப்பட்ட 9 பரப்பு காணியும் கல்லூரியின் விளையாட்டு மைதானமாக புனரமைக்கப்பட்டு அதனோடிணைந்த முகப்பு மதில் குடிநீர் வசதி துடுப்பாட்ட ஆடுகளம் மற்றும் கட்டட வசதிகள் பழைய மாணவர் சங்கங்கள் கல்லூரி அறக்காப்புச்சபை மற்றும் தென்மராட்சி பிரதேச செயலக நிதிப்பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட விளையாட்டு மைதானம் விருந்தினர்கள் மற்றும்  பழைய மாணவர்களால் திறந்து வைக்கப்பட்டது விளையாட்டு மைதான பெயர்ப்பலகை மற்றும் நினைவுக்கல் என்பவற்றையும் திரை நீக்கம் செய்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்