Tue. May 21st, 2024

மாந்தை மேற்கில் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் வறுமைக் கோட்டிற்குற்பட்ட குடும்பங்களுக்கு இன்று வியாழக்கிழமை காலை அத்தியாவசிய உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் குறித்த அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் மற்றும் கிராம அலுவலகர் ஆகியோர் கலந்து கொண்டு வீடுகளுக்குச் சென்று குறித்த உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்