மாகாண சபைகளுக்கு அதிகாரப்பகிர்வு!! -சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு-
சஜித் பிரேமதாச இன்று வியாழக்கிழமை காலை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை கண்டியில் வெளியிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விஞ்ஞாபனத்தின் முதல் பிரதிகளை அவர் அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கர்களிடம் சமர்ப்பித்து அதனை வெளியிட்டார்.
மகாநாயக்கர்களிடம் தேர்தல் விஞ்ஞாபனம் கையளிக்கும் நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.