Thu. May 16th, 2024

மஹிந்த தேசப்பிரியவை பதவிவிலக கோரி யாழில் உண்ணாவிரம் இருந்தவர் பொலிஸாரால் கைது!!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப் பிரியவை பதவி விலகுமாறு கோரி யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தம்பிராசா பொலிஸாரால் சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தபால் மூல வாக்களிப்பின் போது, கொழும்பு மாவட்டத்தில் உள்ள தபால் மூல வாக்களிப்பில் ஈடுபடுபவர்களின் பெயர் விபரங்கள் தனிச் சிங்கள மொழியில் வழங்கப்பட்டது. இதனை தமிழ் மொழியில் தருமாறு கோரியிருந்த போதும், அந்த பெயர் விபரங்கள் தமிழ் மொழியில் வழங்கப்படவில்லை.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப் பிரியவை பதவி விலகுமாறு கோரி இன்று வியாழக்கிழமை மாலை அவர் யாழ்.மாவட்ட தேர்தல்கள் திணைக்களம் அமைந்துள்ள மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தார்.

அவர் போராட்டத்தினை ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே யாழ்.மாவட்ட தேர்தல்கள் அலுகலக அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைய யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்