மரக்கட்டையால் அடித்து ஒருவர் கொலை!! -சம்மாந்துறையில் சம்பவம்-
சம்மாந்துறை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலின் போது பொல்லுகளால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் 2, வன்னியார் வீதியில் உள்ள கடற்கரை பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது..
இதன்போது மரக்கட்டை ஒன்றினால் தலையில் தாக்கியதில் 73 வயதுடைய முகம்மது தம்பி மீரான் எனும் மீராலெப்பை என்பவர் உயிரிழந்துள்ளார்.
குடி போதையிலிருந்து இருவரே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.