Fri. May 17th, 2024

மன்னார் பிரிமீயர் லீக் சுற்றுப் போட்டியின் 15 ஆம் நாள் சுற்றில் மன்னார் பீனிக்ஸ் எப்.சி  வெற்றி

மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்ட மன்னார் பிரிமீயர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் 15 ஆம் நாள் போட்டிகள்   நேற்று   செவ்வாய்க்கிழமை  (03)  இரவு 7.30 மணியளவில் மின் ஒளியில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
‘மன்னார் பிரிமீயர் லீக்’ தலைவரும், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவரும், மன்னார் நகர முதல்வருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில்  குறித்த போட்டி இடம் பெற்றது.
குறித்த உதை பந்தாட்ட போட்டியானது அயலன்ட் (ISLAND) உதை பந்தாட்ட கழகத்திற்கும்   மன்னார் பீனிக்ஸ் (MANNAR PHOENIX) உதைபந்தாட்ட கழகத்திற்கு இடையில் இடம் பெற்றது.
இதன் போது போட்டி மிகவும் விரு விருப்பாக இடம் பெற்றது.
இதன் போது அயலன்ட் உதைபந்தாட்ட கழக வீரர் வி.ஜெயபாலன் 45 ஆவது நிமிடத்தில் ஒரு கோலை அடித்தனனர்.அதனைத் தொடர்ந்து மன்னார் பீனிக்ஸ் உதை பந்தாட்ட கழக வீரர்களான எஸ்.நியூக்சன் டயஸ் 66 ஆவது நிமிடத்தில் ஒரு கோலையும்,எஸ்.றைசன் போல் 71 ஆவது நிமிடத்தில் ஒரு கோலையும் அடித்தனர்.
இதன் போது மன்னார் பீனிக்ஸ் உதைபந்தாட்ட கழகம் 2:1 என்ற கணக்கில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்