Mon. May 13th, 2024

மன்னார் பிரிமீயர் லீக்’ உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி  நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை   ஆரம்பம்-

மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால்   நாளை ஞாயிற்றுக்கிழமை (16)  மாலை  இடம் பெறவுள்ள நிலையில் இன்று சனிக்கிழமை மதியம் போட்டியின் கின்னம், மற்றும் சீருடை ஆகியவற்றின் அறிமுகம் வெகு சிறப்பாக இடம் பெற்றது.
‘மன்னார் பிரிமீயர் லீக்’ தலைவரும், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவரும்,மன்னார் நகர முதல்வருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் மன்னார் நகர சபை மண்டபத்தின் கேட்போர் கூடத்தில் இன்று சனிக்கிழமை மதியம்  அறிமுகம் நிகழ்வு இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் இலங்கை உதை பந்தாட்ட சம்மேளனத்தின்   செயலாளரும், மன்னார் பிரிமீயர் லீக் போட்டியின் குழு தலைவருமான பி.ஞானராஜ், லீக்கின் நிர்வாக உறுப்பினப்பினர்கள், கழகங்களின் தலைவர்கள், செயலாளர்கள், அணிகளின் உரிமையாளர்கள்,வீரர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது நாளை ஞாயிற்றுக்கிழமை (16) மாலை இடம் பெறவுள்ள மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்படவுள்ள ‘மன்னார் பிரிமீயர் லீக்’ உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் கின்னம், மன்னார் பிரிமீயர் லீக்’ உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி உரிமையாளர்கள்,முகாமையாளர்கள் அணியின் தலைவர்கள் அறிமுகம் இடம் பெற்றது.
இதன் போது ‘மன்னார் பிரிமீயர் லீக்’ தலைவரும், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவரும்,மன்னார் நகர முதல்வருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் அவர்களினால் ‘மன்னார் பிரிமீயர் லீக்’ உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் சீருடை,அணியின் சீருடை ஆகியவை வைபவ ரீதியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
-அதனைத் தொடர்ந்து போட்டியின் கின்னம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
குறித்த கின்னமானது மன்னார் நகர சபை மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக மன்னார் பஸார் பகுதியூடாக கொண்டு செல்லப்பட்டு மக்களின் பார்வைக்காக காண்பிக்கப்பட்டு மீண்டும் மன்னார் நகர சபை நோக்கி கொண்டு செல்லப்பட்டது.
-நாளை 16 ஆம் திகதி) ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் மின் ஒளியில் போட்டி கோலா கலமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
‘மன்னார் பிரிமீயர் லீக்’ உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிக்கு 10 உரிமையாளர்களினால் 10 அணிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
முதலாவது போட்டியானது நாளை   ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு கழகங்களின் அணி வகுப்புடன் மன்னார் நகர மத்தியில் இருந்து மன்னார் பொது விளையாட்டு மைதானத்தை நோக்கி பவணியாக அழைத்து வரப்பட்டு முதலாவது போட்டி இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்