மனைவியை வெட்டிக் கொன்ற கணவன், மைத்துனியையும் வெட்டி தானும் தற்கொலை முயற்சி. கிளிநொச்சியில் சம்பவம்.
கிளிநொச்சி- மயில்வாகனபுரம் கிராமத்தில் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன், தடுக்க முயற் சித்த மைத்துனியையும் வெட்டியுள்ளதுடன், தானும் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த கொலையா ளியும், கொலையாளியின் மைத்துனியும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
பச்சிளைப்பள்ளி பிரதேச சபையில் பணியாற்றும் சுகந்தன் சகுந்தலா (வயது -25) என்ற குடும்பப்பெண்ணே கொல்லப்பட்டார். அவரது கணவரான கொலையாளி சுகந்தன் (வயது-24),
கொல்லப்பட்டவரின் இளைய சகோதரி கிருஷ்ணசாமி பிரியங்கா (வயது-22) ஆகிய இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சகுந்தலாவுக்கும் சுகந்தனுக்கும் 3 வருடங்களுக்கு முன்னர் திருமணம் இடம்பெற்றது. எனினும் அண்மைக்காலமாக இருவருக்கும் முரண்பாடு இருந்துள்ளது.
இன்று அதிகாலை மனைவியை கத்தியால் குத்தி சுகந்தன் கொலை செய்துள்ளார். அதனைக் கண்ட சகுந்தலாவின் சகோதரி தடுக்க முற்பட்டுள்ளார்.
அதனால் மனைவியின் சகோதரியின் தலையில் கொலையாளி கத்தியால் குத்தியுள்ளார். அத்துடன், தானும் கழுத்தறுத்து தற்கொலைக்கு கொலையாளி முயன்றுள்ளார்.
கொலையாளி தற்போது பொலிஸ் காவலில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்” என்று தருமபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.