மத்திய வங்கி அதிகாரிகளை வெளுத்து வாங்கிய கோத்தபாய
உலகின் ஏனைய நாடுகளை விட முதலாவதாக இந்நாட்டை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு எமக்குள்ள இந்த பொருளாதார நெருக்கடி இன்னும் இன்னும் கீழ் நோக்கி செல்வதற்கு முன்னர் இதனை மீளக்கட்டியெழுப்புவது உங்கள் கைகளிலேயே தங்கியுள்ளது.
தற்போது அதனை நடைமுறைப்படுத்த எனக்கு உதவி செய்யுங்கள். நான் கூறும் முறைமைகள் இல்லையென்றால், என்ன முறைமைகளை நீங்கள் முன்வைக்கிறீர்கள்? இவ்வாறான சந்தர்ப்பத்தில் இந்நாட்டில் உள்ள மிகப்பெரிய பொருளாதார நிபுணர்கள் இருக்கும் இடத்தில் இது உங்களது கடமையில்லையா? இந்த நிலைமையில் இருந்து முன்னேறுவதற்கு அவசியமான முறைமையொன்றை முன்வைப்பது? நீங்கள் எதனை முன்வைத்திருக்கிறீர்கள்?
எதனைச் செய்ய சொல்கிறீர்கள்? என்ன ஆலோசனைகளை நீங்கள் எனக்கு வழங்கியிருக்கிறீர்கள்? எதுவும் இல்லை. இவற்றை பார்த்து நான் சிந்தித்தேன். நான் கூறுபவைகளை செய்ய எவரும் முன்வருவதில்லை. அதனையும் தடுப்பீர்களாயின் ஒன்றை மாத்திரம் சொல்லிக் கொள்கிறேன். தயவுசெய்து நான் கூறுபவைகளை நடைமுறைப்படுத்தவில்லையென்றால் உங்கள் திட்டங்களை நாளை காலையாகும்போது எனக்கு தாருங்கள். இந்த பொருளாதார நிலையில் இருந்து எவ்வாறு நாம் முன்னேறுவது என்பது பற்றிய உங்கள் கருத்துக்கள் என்ன என்பதை, எவ்வாறு பொருளாதாரத்தை வலுப்படுத்துவது, எவ்வாறு இந்த பொருளாதார நிலையில் வங்கிகளுக்கு உதவுவது, எவ்வாறு சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு கைகொடுப்பது, எவ்வாறு என்று நீங்கள் கூறுங்கள். நான் கூறுவது தவறு என்றால் தவறு என்று எனக்குக் கூறுங்கள் எனத் தெரிவித்தார்.